கடிகை / Kadigai
“Kadigai” – THFi Virtual Academy of Excellence is an online training platform. ‘Kadigai’ offers you various online training opportunities to everyone seeking to learn Tamil Heritage, History and Archaeology. Almost all our programs are conducted online.
“கடிகை” – தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகத்தின் வழி தமிழ் மரபு, வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் உங்கள் கல்வியை விரிவாக்கிக் கொள்ளுங்கள்.
கடிகை
கடிகை - சொல்லின் பொருள்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், அய்யனார்குளம் என்ற ஊரில் உள்ள மன்னார் கோயிலில் உள்ள குகைப்பகுதியில் தமிழி கல்வெட்டு ஒன்று உள்ளது. ஐராவதம் மகாதேவன் அவர்களால் வாசிக்கப்பபட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் Early Tamil Epigraphy அறிக்கையில் இது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இராசாப்பாறையில் இயற்கையாய் அமைந்த குகைத்தளத்தின் முகப்பு நெற்றிப்பகுதியில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு உள்ளே இரு கற்படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உட்கூரைப் பகுதியில் 3 வரிகளில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
”பள்ளி செய்வித்தான் கடிகை (கோ) வின் மகன் பெருங்கூற்றன்“ என்பது கல்வெட்டு வாசகமாகும். கோ என்ற எழுத்து ஊகிக்கப்பட்டதாகும். கடிகை கோவின் மகன் பெருங்கூற்றன் என்பவன் பள்ளி செய்வித்தான் என்று பொருள்படும். நன்றி: தமிழகத் தொல்லியல் துறை -https://www.tagavalaatruppadai.in/
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை பிரிவு 19 அக்டோபர் 2024ல் ஐரோப்பியத் தமிழியல் இணையவழிக் கருத்தரங்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. சுமார் 68 நபர்கள் இந்தக் கருத்தரங்கத்திற்காக இணைய வழியில் பதிவு செய்து கொண்டார்கள். கருத்தரங்கில் மூன்று உரைகள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சி ஜும் இணையவழியில் நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளை முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது. தமிழ் மரபு அறக்கட்டளை யூடியூப் சேனலில் பதிவேற்றம் …
தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் பயிற்சிகளிலும் பயிலரங்கங்களிலும் பங்கு கொள்ளத் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல்: [email protected]
Books
இலக்கிய மீளாய்வு: நூலாசிரியர்: முனைவர் தேமொழி நூல் குறிப்பு: இலக்கியங்கள் அவை பாடப்பட்ட போது அவற்றை எழுதியவர் எதை நினைத்து எழுதியிருப்பார் என்பது விடை தெரியாத ஒரு கேள்விதான். ஆனால் வாசிப்போர் அவரவர் மனதிற்கு ஏற்ற வகையில் கருத்தாக்கங்களை …